ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது
ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் 142 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் குறைந்தபட்சமாக 66 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 74 ரூபாய்க்கும், சராசரியாக 73 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மொத்தம் 48 குவிண்டால் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டு ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com