search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் அமோகம்
    X

    ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் அமோகம்

    • பொங்கல் பண்டிகை, அடுத்த மாதம் தைப்பூசம் வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள மாநக ராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய் கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொங்கல் வியா பாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். பொங்கல் பண்டிகை, அடுத்த மாதம் தைப்பூசம் வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்த னர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    இன்று சேலம், செஞ்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

    கம்பளி, பெட்சீட் குழந்தை களுக்கான ஆடைகள், காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையானது. சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதேபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது அய்யப்பன் சீசன், தைப்பூசம் வர உள்ளது. இதனால் காவி துண்டு, காவி வேஷ்டி, காவி சேலை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    வேஷ்டிகள் ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகி–றது. அதேபோல் துண்டுகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இன்று ஈரோடு ஜவுளி சந்தை, மணி கூண்டு பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    Next Story
    ×