search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லியோ படம் திரையிடும் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
    X

    லியோ படம் திரையிடும் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

    • 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    • போலீசாரின் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    ஈரோடு, அக். 18-

    நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.

    இந்த திரைப்படத்தை நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சியாக நள்ளிரவு 1.30 மணி அளவில் முடி வடையும் வகையில் திரையி டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதிய திரைப்படம் வெளியிடும்போது தியேட்டர்களில் முறையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் வசதிகளை உரிமையாளர்கள் செய்திருக்க வேண்டும்.

    தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படும் போது சுகா தார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தியே ட்டர்களில் ரசிகர்களின் வாகனங்கள் எளிதாக உள்ளே வந்து வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    போலீசாரின் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் காட்சி அரங்குக்குள் சிரமமின்றி உள்ளே வந்து வெளியே செல்லும் வகையில் முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும். இருக்கைகள், தியேட்டர்களின் வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    தியேட்டர்களை சுகாதா ரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடை முறைகளுடன் சிறப்பு காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    அரசால் நிர்ண யிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக் கட்டணத்தையோ, வாகன நிறுத்த கட்டணத்தையோ வசூலிக்க கூடாது.

    இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×