வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் இடையூறாக இருந்த மின் கம்பங்கள் அகற்றம்

வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றி சாலை யோரம் அந்த மின் கம்பங்களை நட்டி மின் இணைப்புகள் கொடுத்தனர்.
வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் இடையூறாக இருந்த மின் கம்பங்கள் அகற்றம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் திண்டல் செல்லும் சாலை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணி நடந்தது.

வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதி முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இந்த பகுதி வழியாக சரக்கு வாகனங்கள் ஈரோடு மாநகர பகுதிக்குள் வராமல் ஈரோடு- பெருந்துறை ரோடு, நசியனூர் ரோட்டில் இருந்து வில்லர சம்பட்டி நால்ரோடு வழி யாக சித்தோடு, பவானி வழியாக கோபி சத்திய மங்கலம் செல்கின்றன.

இதேபோல் அங்கிருந்து வரும் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் செல்லாமல் கனிராவுத்தர் குளம் வழி யாக வில்லரசம்பட்டி நால்ரோடு வந்து பெருந்துறை ரோடு வந்து திண்டல் வழியாக பெருந்துறை கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக ரோடுகள் அகலப்படுத்தும் பணி நடந்து வந்தது. அவ்வாறு விரிவாகப் பணியின் போது மின் கம்பங்கள் அகற்றப்படாமல் மின்கம்பங்களை சுற்றி தார்ரோடு அமைக்க ப்பட்டது. இவ்வாறு அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அகற்ற ப்படாமல் மின்கம்பங்களை தார் ரோடு அமைக்க ப்பட்டது.

இதனால் இரவு நேரங்க ளில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானது.

இதனையடுத்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்ட னர். இதனை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றி சாலை யோரம் அந்த மின் கம்பங்களை நட்டி மின் இணைப்புகள் கொடுத்தனர்.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய அனைத்து மின்கம்பங்களையும் அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு சாலையோரம் நட்டி மின் இணைப்புகள் கொடுத்து உள்ளனர். மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரி வித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com