search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணி பெண் மூச்சு திணறல் ஏற்பட்டு திடீர் சாவு
    X

    கர்ப்பிணி பெண் மூச்சு திணறல் ஏற்பட்டு திடீர் சாவு

    • சம்பவத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    சென்னை திரு.வி.க.நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவருடைய மனைவி மிஸ்சியா மரினா ஜெனோவா (வயது 31). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கர்ப்பிணியாக இருந்த மிஸ்சியா மரினா ஜெனோவா ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

    கடந்த மாதம் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மிஸ்சியா மரினா ஜெனோவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×