search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை
    X

    ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை

    • ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது
    • ஒத்திகையை கலெக்டர், எஸ்.பி. பார்வையிட்டனர்

    ஈரோடு,

    ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுத ந்திர தின விழா கொண்டா டப்பட்டு வருகிறது. தற் போது விளையாட்டு மைதா னத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கி ழமை) சுதந்திர தின விழா ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் நடக்கிறது. நாளை காலை கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா தேசியக்கொ டியை ஏற்றி வைத்து மரியா தை செலுத்துகிறார்.

    அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சுத ந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுதாரர்கள் கவுரவி த்து, அரசு துறையில் சிறப்பாக பணியா ற்றிய அலுவல ர்கள், பணியாள ர்கள் மற்றும் தன்னார்வ லர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு அரசு இசைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவ-மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இன்று காலை ஆணைக்கல்பாளை யம் ஆயுதப்படை மைதா னத்தில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த அணி வகுப்பு ஒத்திகையை கலெ க்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் திறந்த வெளி ஜிப்பில் சென்று பார்வையிட்டனர். இதில் போலீசாருடன், ஊர் காவல் படையினர், தேசிய மாணவர் படையி னர் கம்பீரமாக நடந்து சென்றனர். இதைத் தொட ர்ந்து கலெக்டர் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் டவுண் டி.எஸ்.பி. ஆறுமுகம், ஏ.எஸ்.பி. தானஸ் பிரியா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×