search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி ஆலைகளில் போலீசார்-அதிகாரிகள் ஆய்வு
    X

    அரிசி ஆலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    அரிசி ஆலைகளில் போலீசார்-அதிகாரிகள் ஆய்வு

    • அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
    • புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்னிமலையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக்கழக அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி சம்பந்தமாக முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அரிசி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    Next Story
    ×