பிளஸ்-2 மாணவி மாயம்

பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஈரோடு:

பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நம்பியூர் சி.எஸ்.ஐ. வீதியை சேர்ந்தவர் தேவகிருைப.  பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி ஜோதி. இவர்களுக்கு ஜெயா (17) என்ற மகள் உள்ளார். ஜெயா பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

 சம்பவத்தன்று தேவகிருபை கடைக்கு சென்று விட்டார். ேஜாதி வெளியே சென்றார். வீட்டில் ஜெயா மட்டும் இருந்து வந்துள்ளார். பின்னர் ஜோதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டில் ஜெயா இல்லை. 

அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேவகிருபை நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயாவை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com