search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் முககவசம் அணியாமல் அலட்சியமாக செல்லும் மக்கள்
    X

    ஈரோட்டில் முககவசம் அணியாமல் அலட்சியமாக செல்லும் மக்கள்

    • பொது இடங்களில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
    • மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை களையும் முறையாக பின்பற்றுவது இல்லை. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 989 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 22 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்களில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ஆனால் இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிப்பதில்லை. கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக முககவசம் அணியாமல் அலட்சியமாக செல்கின்றனர். இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முககவசம் அணியாமல் செல்கின்றனர்.

    மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை களையும் முறையாக பின்பற்றுவது இல்லை. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் இன்னும் அபராதம் விதிக்கும் பணி தொடங்கவில்லை. பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் சுகாதார த்துறையினர் முககவசம் அணிந்து வரவேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதை பெரும்பாலானோர் காதில் வாங்கி கொள்வதாக தெரிய வில்லை. இது போன்ற அலட்சிய போக்கால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் அரசு நிலை உருவாகியுள்ளது.

    எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×