search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 மாதங்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் தவிப்பு
    X

    3 மாதங்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் தவிப்பு

    • அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது.
    • அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் 10-வது வார்டு பகுதியில் சாலை, மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா சாலை பஸ் நிலையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கே குடிநீர் விநியோ கம் கடந்த 3 மாதங்களாக வருவதில்லை எனவும், இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள் 11-வது வார்டு பகுதிக்கு சென்று தண்ணீரை பிடித்து வந்து பருகும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், மற்ற தேவைகளுக்கு வண்டி தண்ணீர் வாங்கி பயன்படு த்தி வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மட்டுமின்றி பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகளும் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    எனவே உடனடியாக பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×