search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான முதியவர் வாழை தோட்டத்தில் பிணமாக மீட்பு
    X
    ராமசாமி கவுண்டர்.

    மாயமான முதியவர் வாழை தோட்டத்தில் பிணமாக மீட்பு

    • வாழைத்தோட்டத்தில் பிணமாக முதியவர் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த ஏழூர் வேட்டுவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (82). இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு அம்மாசை குட்டி (54) என்ற மகன் உள்ளார். மகனுக்கு திருமணமான நிலையில் ராமசாமி கவுண்டர் வேட்டுவன் புதூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் ராமசாமி கவுண்டரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அம்மாசை குட்டி டி.என்.பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் விட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராமசாமி கவுண்டரை காணவில்லை. இதனையடுத்து அம்மாசை குட்டி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமசாமி கவுண்டரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிரானைட்க்கு பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்தில் இறந்த நிலையில் பிணமாக முதியவர் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடப்பது காணாமல் போன ராமசாமி கவுண்டர் என்பதை உறுதி செய்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதனையடுத்து ராமசாமி கவுண்டரின் உடலை மீட்ட போலீசார் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமசாமி கவுண்டர் அருகிலுள்ள அந்த வாழைத்தோட்டத்திற்கு எதற்கு வந்தார்? மயங்கி விழுந்து இறந்தார? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×