என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக்குழு ஆய்வு
- விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
- அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறு வெளி யிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணை களுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழு வானது விதைப்ப யிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல், விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத் தரத்தினை உறுதி செய்கின்றது.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை பி எஸ் ஆர் 2 இரகம் வல்லு நர் நிலை விதை ப்பண்ணை அமை க்கப்பட்டு விதைப்ப யிர் பூப் பருவம் மற்றும் அறு வடை பருவ த்தில் உள்ளது.
இவ்விதைப்ப ண்ணை யை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெ ருக்கம் மற்றும் மரபியல் துறையின் இயக்குநர் ரவிகே சவன்,
பேராசிரியர் குமரேசன், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு,
அமுதா மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல இட ஆராய்ச்சி திடல்களான நிலக்கடலை, எள், கம்பு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்