search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தறிபட்டறை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை
    X

    தறிபட்டறை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை

    • பிருந்தா தாய் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீட்டில் அறையில் உள்ள பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனி அடுத்த இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (31). இவர் அதே பகுதியில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நேற்று மதன்குமார் தனது தாயின் சிகிச்சைக்காக தாயை அழைத்து கொண்டு பெங்களூர் சென்று விட்டார். பிருந்தா வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் இரவு பிருந்தா தாய் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் அறையில் உள்ள பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுண ர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×