search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியம்பட்டி வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்
    X

    புளியம்பட்டி வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது.
    • மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.52 ஆயிரம், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரம், எருமைகள் ரூ.15 முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் 12 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு ரூ.15 ஆயிரம் மற்றும் செம்மறியாடு ரூ.12 ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×