

ஈரோடு:
ஈரோடு சோளங்காபாளையம் டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு வதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த புதுக்கோ ட்டை மாவட்டம் வேள ச்சேரி பட்டி யைச் சேர்ந்த ராமன் மகன் மாரிமுத்து (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.