search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வ விநாயகர்கோவில் கும்பாபிஷேகம்
    X

    செல்வ விநாயகர்கோவில் கும்பாபிஷேகம்

    • கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை சின்னப்பை யன்புதூரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதியதாக தீர்த்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 சிலைகள் அமை ந்துள்ள கோவிலு க்கான கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத் துடன் தொடங்கியது.

    தொடந்து நேற்று 2 மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நிறைவுற்ற இன்று அதிகாலை 4 மணி க்கு 4-ம்கால யாக பூஜைகள் நடந்தன.

    பின்னனர் அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் 5.45 மணிக்கு மேல் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து தொட ர்ந்து தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வுகளும் அன்னதானமும் நடந்தன.

    இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×