search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 423 கன அடியாக குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 423 கன அடியாக குறைந்தது

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்தி–ற்கு 300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×