பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,768 கனஅடியாக அதிகரிப்பு

இன்று காலை பவானிசாகர் அணைக்க நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக சரிந்து உள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,768 கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்க நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக சரிந்து உள்ளது. அணை க்கு வினா டிக்கு 3,768 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அணையில் இருந்து கீழ்ப வானி வா ய்க்கால் பாச னத்தி ற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. காளி ங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.56 அடியாகவும், பெரு ம்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் 9.71 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.95 அடி யாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com