search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.58 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லா ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலை யில் பவானிசாகர் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்த தால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளது.

    இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் வருகிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை பாசனத்தி ற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானி சாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.54 அடியாக உள்ளது. பெரு ம்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.29 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.26 அடியாக உள்ளது.

    Next Story
    ×