search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை
    X

    மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை

    • ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி சன்னியாசிபட்டி பகுதி மேட்டுப்பாளைய த்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மனைவி இறந்து விட்டார்.

    இதனால் ஆறுமுகம் மனைவி இறந்த துக்கத்தில் நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதை யடுத்து உறவினர்கள் ஆறுமுகத்தை ஒரு தனியார் மரு த்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு முகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    பின்னர் இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் வினோத் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×