search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    • விஜய் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண் டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கக்கன் நக ரைச் சேர்ந்தவர் விஜய் (வயது 28). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீபா (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    விஜய்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபடுவார்.இதனால் தீபா கணவரிடம் கோபி த்துக் கொண்டு கரூரிலுள்ள அவரது பெற்றோர் வீட்டி ற்கு குழந்தைகளை அழை த்துக் கொண்டு சென்று விட்டார்.

    இதையடுத்து மன உளை ச்சலில் இருந்த விஜய் மனைவி தீபாவிற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரு மாறு அழைத்தார். அதற்கு தீபா குடிப்பழக்கத்தை விட் டால் தான் நான் வீட்டுக்கு வருவேன் என்று கூறினார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மன வேதனையில் இருந்த விஜய் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண் டார். இதையடுத்து உறவின ர்கள் விஜயின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்த னர்.

    பின்னர் இதுகு றித்து தீபா கருங்கல்பாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×