search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை மாயம்
    X

    அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை மாயம்

    • தலைமை ஆசிரியை சாந்தி ஸ்டேசனரி பொருட்கள் வாங்க கரூர் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
    • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் மெயின் வீதியை சேர்ந்தவர் சாந்தி (52). இவர் வடுகனூர் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள் வாங்கி வருவதற்காக கரூர் சென்று வருவதாக சம்பவத்தன்று கூறி சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.

    இதையடுத்து சாந்தியின் மகன் சூர்யா (26) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சாந்தியைத் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×