search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல்பாளையம் அருகே இன்று காலை அரசு பஸ்கள் மோதல்
    X

    கருங்கல்பாளையம் அருகே இன்று காலை அரசு பஸ்கள் மோதல்

    • டவுண் பஸ் முன்பு திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.
    • பின்னால் வந்த கோவை-சேலம் அரசு பஸ் டவுண் பஸ் மீது மோதியது.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்று காலை கோவை-சேலம் செல்லும் அரசு பேருந்து ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணி களுடன் கருங்கல்பாளையம் அருகே சென்று ெகாண்டி ருந்தது.

    பேருந்தை குமரபா ளையம் உத்திரசாமி (வயது 57) என்பவர் ஓட்டி சென் றார். அதில் நடத்துனராக காஞ்சிகோவில் மூர்த்தி என்பவர் பணியாற்றினார்.

    இதேபோல் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் டவுண் பஸ்சை திருச்செ ங்கோடை சேர்ந்த மாணி க்கம் (55) என்பவர் ஓட்டி சென்றார். இதில் நடத்து னராக நாமக்கல்லை சேர்ந்த ரவிசந்திரன் உள்ளார்.

    இந்த 2 அரசு பேருந்து களும் ஒன்றன் பின் ஒன் றாக கலுங்கல்ப ளையம் சோதனை சாவடி காலிங்க ராயன் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது டவுண் பஸ் முன்பு திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் மாணிக்கம் திடீரென பிேரக் பிடித்துள்ளார்.

    இதனால் பின்னால் வந்த கோைவ-சேலம் அரசு பஸ் டவுண் பஸ் மீது மோதியது. இதில் டவுண் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது.

    இந்த விபத்தில் கோ வை-சேலம் பஸ்சில் பய ணம் செய்த பயணி ஒருவரு க்கு மட்டும் காயம் ஏற்ப ட்டது. மற்ற பயணிகள் காய மின்றி உயிர்தப்பினர்.

    பின் னர் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    Next Story
    ×