சாலை ஓரமாக குவிந்துள்ள குப்பை கழிவுகள்

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உட்பட்ட தினசரி மார்க்கெட் அருகே சாலை ஓரமாக குப்பைகள், தினக்கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
சாலை ஓரமாக குவிந்துள்ள குப்பை கழிவுகள்
Published on

பு.புளியம்பட்டி:

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உட்பட்ட தினசரி மார்க்கெட் அருகே சாலை ஓரமாக குப்பைகள், தினக்கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.

இது மட்டுமின்றி வாரச்சந்தை, நம்பியூர் சாலை, சத்தி மெயின் ரோடு, பவானிசாகர் சாலை, திருப்பூர் ரோடு போன்ற பல பகுதிகளில் குப்பைகளும், கழிவுகளும் ஆங்காங்கே கொட்டி கிடைக்கின்றன.

இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தெருவில் இருக்கும் குப்பைகளை எடுத்து வந்து ஓரிடத்தில் போட்டு தீ வைத்து விடுகின்றன.

எனவே குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com