search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில், 100-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய துணை செயலாளர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். இதில், 100-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி அனைத்து பள்ளிகளிலும் துவங்குவதால் அதனை சமைத்து காலையில் உண்ணும் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்.

    அதை மதிய உணவு சமைக்கும் நிரந்தர அமைப்பாளர்கள், சத்துணவு பணியாளர்கள் அனைவரும் காலையில் நடக்கும் சம்பவத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என்பதால் அதையும் நாங்களே சமைத்து தருகி–றோம். எங்களுக்கு சம்பளத்தினை உயர்த்தி எங்களையே நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×