search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு கடைகளில் தீ-தொழில் பாதுகாப்பு குழு திடீர் ஆய்வு
    X

    பட்டாசு கடைகளில் தீ-தொழில் பாதுகாப்பு குழு திடீர் ஆய்வு

    • கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி, விருநகர் மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தை தொடர்ந்து, வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் இதர வெடி மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்திடவும், மாநில, மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இக்குழுக்களானது தீ தடுப்பு மற்றும் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கண்காணிக்கும். மேற்படி அரசாணையின்படி ஈரோடு மாவட்டதில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வெடி மருந்து உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் உரிமதாரர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்று வதை உறுதி செய்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறை யான பாதுகாப்பு அம்ச ங்களை உறுதிசெய்தி டவும், வருவாய் துறை, காவல்து றை, தீயணைப்பு துறை மற்றும் தொழிற்பாது காப்புதுறை அலுவலர்களை உள்ள டக்கிய தணிக்கை குழு வருவாய் கோட்டா ட்சியரின் மேற்பா ர்வை யின்கீழ் தாசில்தார் தலை மையில் 10 வட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தணிக்கை குழுவா னது அந்தந்த வட்டங்களில் உள்ள வாணம் மத்தாப்பு தயாரிப்பு நிறுவனங்கள், நிரந்தரமாக, தற்காலிக பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றை தணிக்கை செய்யும்.

    நேற்று கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டஅலுவலர் தலைமையிலான குழுவினர் கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் நகரப்பகுதி, உக்கரம், மற்றும் கோபி செட்டிபாளையம் நகர ப்பகுதிகளிலும், ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரம், பளையபாளையம், ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அரசு விதியின்படி செயல்படாத கடைகளின் உரிமையாளர்கள், உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் உரிமத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள அளவினைவிட அதிகமாக பட்டாசு இருப்பு வைத்து ள்ளவர்கள் மீதுவெடி பொருள் சட்டம், 1884 மற்று ம் வெடிபொருள் விதிகள், 2008-ன்படி கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.

    Next Story
    ×