தூக்கு போட்டு பெண் தற்கொலை

தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார்.
தூக்கு போட்டு பெண் தற்கொலை
Published on

சென்னிமலை,

சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு மேலப்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இவரது மனைவி செல்வி (55). இவர்களுடைய மகன் சுரேஷ் (34). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வசித்து வருகிறார்.

செல்வி, மேலப்பாளையத்தில் தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.

நோயால் பாதிக்கப்பட்ட செல்வி மனம் உடைந்து தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செல்வி இறந்து விட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com