ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் வெங்காயம் விலை உயர்ந்தது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதுசின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை கடந்த வாரத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் வெங்காயம் விலை உயர்ந்தது
Published on

ஈரோடு,

ஈரோடு வ உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. திருப்பூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா, மைசூர் போன்ற பகுதியி லிருந்து நாள் ஒன்றுக்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்நிலையில் வட மாநி லம், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்து ள்ளது.

குறிப்பாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை கடந்த வாரத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 -க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.65-க்கு இருக்கி றது.

வெளிக்கடையில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெ ங்காயம் ரூ.70 - 80 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.70 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90 முதல் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக ஈரோடு வஉசி காய்கறி மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 10 லாரிகள் வெங்காயம் மூட்டை வந்து கொண்டிருந்த நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்து இன்று வெறும் 4 லாரிகள் மட்டுமே வெங்காயம் வரத்தாகி உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com