மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை அருகே உள்ள சின்ன வடமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (23). எலக்ட்ரீசியன்.

சம்பவத்தன்று மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது யு.பி.எஸ்-ஐ ஒரு அறையில் இருந்து மற்றொரு அறையில் மாற்றி அதற்கான மின்சார வயர்களை இணைத்து கொண்டிருந்தார்.

அப்போது மெயின் பாக்ஸ் ஸ்விட்சை அணைக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மயில்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com