search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் படுகாயம்
    X

    மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் படுகாயம்

    • மின்சாரம் தாக்கியதில் பழனிச்சாமி கீழே தூக்கி வீசப்பட்டார்.
    • உடலில் படுகாயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    டி.என்.பாளையம், நவ. 18-

    டி.என்.பாளையம் கொங்கு நகரை சேர்ந்தவர் பழனி ச்சாமி (55). இவர் டி.என்.பாளையம் துணை மின் நிலை யத்தில் லைன் இன்சார்ஜ் ஆக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு டி.என்.பாளையம் பகுதியில் மின்சாரம் தடைபட்டு உள்ளது.

    இந்த மின் தடையை நீக்க பழனிச்சாமி டி.என்.பாளையம் துணை மின் நிலைய டிரா ன்ஸ்பார்மரில் (மின்மா ற்றி) வேலை செய்து கொண்டி ருந்தார்.

    அப்போது டிரான்ஸ்பா ர்மரில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பழனிச்சாமி கீழே தூக்கி வீசப்பட்டார்.

    இதனை கண்ட அருகில் இருந்த மின் ஊழியர்கள் உடனே பழனிச்சாமியை மீட்டு 108 ஆன்புலன்சு மூலம் முதலுதவி சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தற்போது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மின்சாரம் தாக்கியதில் பழனிச்சாமிக்கு உடலில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளதால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×