search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்
    X

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

    • பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • காலை 6 மணிக்கு தீ மிதி திருவிழாவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பண்டிகை கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து முக்கிய நிகழ்வான எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி, கொடியேற்றம் ஆகியவை நடைபெற்றது. பண்டிகை தொடங்கிய நாளில் இருந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் குண்டம் திருவிழா வரும் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் அந்தியூர் தாலுகா மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பத்ரகாளியம்மன் கோவில் அன்னதான கூடத்தில் நடைபெற்றது.

    அந்தியூர் தாசில்தார் தாமோதரன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்ட த்தில், காவல்துறை, தீயணை ப்பு துறை, மின்சார துறை, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரி கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணிக்கு தீ மிதி திருவிழாவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

    இந்த நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத்தலைவர் சாக்கு பழனிச்சாமி, தி.மு.க. பேரூர் செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், கோவில் செயல் அலுவலர் நந்தினீ ஸ்வரி, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்,

    பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, பி.ஜே.பி. நிர்வாகி சரவணன், கோவில் அலுவலர்கள் செந்தில்குமார், தணிகாசலம் மற்றும் அறங்காவலர் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×