search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

    • கோபிசெட்டிபாளையம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 4 கிராம் தங்க சங்கிலி திருட்டு.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் (36). இவர் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    விமல் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். இந்த நிலையில் நேற்று காலை விமல் வந்து பார்த்த போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×