search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    • மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் அனைத்து வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிகரித்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 611 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.42 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.79அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×