சென்னிமலையில் 40 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு

செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர்.5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது.
சென்னிமலையில் 40 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு
Published on

சென்னிமலை:

சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், யாம் அறக்கட்டளை இணைந்து 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.

வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் நடந்த விழாவில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் புடவை, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், கனி வகைகள் வழங்கப்பட்டது.

விழாவில் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர். பின்பு 5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது. இதில் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com