கலை திருவிழா போட்டி தொடக்கம்

வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி தொடங்கியது.மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும்.
கலை திருவிழா போட்டி தொடக்கம்
Published on

நம்பியூர்:

ஒருங்கிணைந்த பள்ளி க்கல்வி நம்பியூர் வட்டாரம் பள்ளி கல்வி த்துறையின் கீழ் இயங்கும் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் 3000 மாணவர் களில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2023–-24-ம் ஆண்டிற்கான வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி தொடங்கியது.

இதில் நேற்று முன்தினம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நேற்று 9 முதல் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஓவியம் வரைதல், அழகு, கையெழுத்து, நாட்டுப்புற ப்பாடல் வில்லுப்பாட்டு, நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி கவிதை போட்டி, செவ்வியல் நடனம், தனிநபர் நடனம், கும்மி நடனம், கரகாட்டம் போன்ற 9 வகையான பிரிவுகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த 350 மாணவர்கள் கலந்து போட்டிகளில் பள்ளி ஆசிரியர்களும் 30 கலை வல்லுனர்களும் நடுவர்களாக இருந்தனர்.

போட்டியில் முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெறுவர்.மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும்.

மேலும் வெற்றி பெறும் மாணவர்களை தரவரிசையில் முதன்மை வரும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

கலை நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் வட்டார கல்வி அலுவலர் வேலுமணி மற்றும் வட்டார வழ மைய மேற்பார்வையாளர் பொறுப்பு செல்வராஜ் மற்றும் தலைமை ஆசிரியர்க ள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com