

சென்னிமலை:
சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது.
இதையொட்டி உற்சவர் நடராஜ பெருமானுக்கும்,தாயார் சிவகாமி அம்மையாருக்கும் 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின்பு அலங்கார பூஜை நடந்தது.
இந்த ஆனி திருமஞ்சன அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.