என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மது விற்றவர் கைது
- அனுமதியின்றி மது விற்ற சுந்தர்ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கணபதிபாளையம்-மன்னாதம்பாளையம் சாலையில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த ஈரோடு முத்தையம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






