search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
    X

    லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

    • நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் பவானி-அந்தியூர் மெயின் ரோடு நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அங்கு இருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பவானி மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் தாண்டான் (46) என்பதும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×