விளாங்கோம்பை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

வனப்பகுதியில் அனுமதியின்றி சுற்றி திரிந்த வாலிபர் பிடித்து விசாரணை செய்தனர்.ரூ.10 ஆயிரம் அபராத விதிக்கப்பட்டது.
விளாங்கோம்பை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Published on

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட விளாங்கோம்பை வனப்பகு தியில் வன காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வனப்ப குதியில் அனுமதியின்றி சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கே.என்.பாளையம் அம்மன் நகர் முதல் வீதியை சேர்ந்த மாதேஷ் (25) என்பது தெரிய வந்தது.

இதனை யடுத்து அனுமதி யின்றி அத்துமீறி வனப்பகு திக்குள் சுற்றி திரிந்த குற்றத்திற்காக மாதேஷ் என்பவரை டி.என்.பாளை யம் வனச்சரக அலுவலக த்திற்கு அழைத்து வந்து வனச்சரகர் கணேஷ் பாண்டியன் விசாரணை செய்தார்.

இதனையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாதுகா க்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த மாதேஷ்க்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் உத்தரவின்படி ரூ.10 ஆயிரம் அபராத விதிக்கப்பட்டது.

மேலும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com