search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக மதுவிற்ற 50 பேர் கைது
    X

    சட்டவிரோதமாக மதுவிற்ற 50 பேர் கைது

    • சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அதை வெளியிடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 5 சப்.டிவிசன்களுக்குட்பட்ட போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    Next Story
    ×