search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
    X

    சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

    • பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவயிடம் விரைந்து சென்றுள்ளனர். அப்போது பவானி வடக்கு பள்ளி வீதியை சேர்ந்த செந்தில் (47), பாலக்கரை வீதியை சேர்ந்த கோகுல் (20), ஒருச்சேரிபுதூரை சேர்ந்த கதிர்வேல் (47) பவானி காவேரி வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 4 பேர் வெள்ளை கலரில் 2 சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×