என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்-மொபட் மோதி 4 பேர் காயம்
    X

    மோட்டார் சைக்கிள்-மொபட் மோதி 4 பேர் காயம்

    • டி.என்.பாளையம் வண்ணார் கோவில் திருப்பம் வளைவில் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இதில் வாகனங்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்த நாசர் (23), ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் டி.என். பாளை த்தில் இருந்து பங்களா புதூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அதேபோல் பங்க ளாப்புதூர் உப்புபள்ளம் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் (22), சத்தியமங்க லம் கெஞ்சனூர் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் பங்களா ப்புதூரில் இருந்து டி.என்.பாளையத்துக்கு மொபட்டில் வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சத்தியமங்க லம்- அத்தாணி ரோடு டி.என்.பாளையம் வண்ணார் கோவில் திருப்பம் வளைவில் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் வாகனங்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து, அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் சிறிய காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து பங்களாப் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×