search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
    X

    லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

    • லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன், தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் ரோந்து சென்று லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ்(46) என்பவரை கைது செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன்(32), தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன்(21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×