search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 3 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 3 பேர் கைது

    • ஒரு வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
    • அவரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    பவானி ரோடு நெறிகல்மேடு பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை பிடித்து சோதனை செய்தபோது அந்த நபர் 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர் கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த அர்க்கி என்கிற ஆனந்தகுமார்(35) என தெரிய வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    இதேபோல் கோபி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளியங்கிரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடத்தூர் முனிசிபாலிட்டி குப்பை கிடங்கு அருகே சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சாவை சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருப்பதை ஒத்து கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் ராமன் (22), மவ்லி ரஞ்சித் (25) என தெரிய வந்தது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×