மது-போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது

விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.சரவணன் என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
மது-போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பங்களாபுதூர், அந்தி யூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப், அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ப னை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் மேற்கு தெருவை சேர்ந்த அப்புசாமி மகன் குமார் (வயது 54), கோபிசெட்டி பாளையம் கொங்கராபாளையம் பழனிச்சாமி மகன் மகேந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராம நாதபுரம் மாவட்டம் எல்லி முள்ளி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணன் (30) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த குட்கா, மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com