search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 இன்ஸ்பெக்டர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
    X

    3 இன்ஸ்பெக்டர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

    • கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை்க்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
    • மேலும் வரும் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தொட்டாபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சரக்கு ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கீழ்வாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (19) என்பவர் உயிரிழந்தார்.

    அதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு ஓலப்பாளையம் பிரிவில் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக தந்தை ஏசுராஜூடன், செல்வி மேரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது

    அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் மோதியதில் செல்வி மேரியும், ஏசுராஜூம் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த வழக்கு சிறுவலூர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கோபி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சதீஸ், நகராட்சி அதிகாரிகளுடன் கடை வீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மகேந்தி்சிங் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்து 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அப்போது கடையில் இருந்த உதாராம் என்பவர் சதீசிடம் தகராறு செய்ததுடன், அரசு பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளார். இது தொடர்பாக சதீஸ் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பால முரளிசுந்தரம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பணியாற்றி வருகிறார்.

    அதேபோன்று கெட்டிசெவியூரில் கடந்த 2019-ம் ஆண்டு சரக்கு வேன் மோதியதில் சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார். விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோபி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் இருந்தார். தற்போது அவர் ஈரோடு தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    அதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டு பங்களாபுதூர் அருகே உள்ள பனங்காட்டு பள்ளம் என்ற இடத்தில் வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசார ணைக்கு அதிகாரியாக அப்போதைய பங்களாபுதூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல் இருந்தார்.

    தற்போது கதிர்வேல் கோவை மாவட்டம் போத்தனூர் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    மேற்கண்ட 5 வழக்குகளிலும் சாட்சி விசாரணைக்கு கீழக்கரையில் உள்ள இன்ஸ்பெக்டர் பால முரளிசுந்தரம், போத்தனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஈரோடு் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில்

    கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ன் மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி 3 பேருக்கும் சாட்சி விசாரணை்க்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வரும் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×