புகையிலை பொருள் விற்ற 2 பேர் கைது

போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த புரன்சிங், தல்பாத்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போதை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருள் விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தியூர்- ஈசப்பாரை ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புரன்சிங் (வயது 22), தல்பாத்சிங் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரத்து 200 மதிப்புள்ள ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com