ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் 2 பேருக்கு சிகிச்சை

பாதிப்பு 9 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் 2 பேருக்கு  சிகிச்சை
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 9 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. பாதிப்பை காட்டிலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 890 ஆக உள்ளது.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 152 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com