search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
    X

    லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    • சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அந்தியூர் மெயின் ரோடு பொன்காட்டார் கடை அருகில் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பவானி அருகில் உள்ள ஜம்பை, நல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தாண்டான் (46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி (46) என்பது தெரியவந்தது.

    அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது, செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரியவ ந்ததை தொடர்ந்து 2 பேரையும் பவானி போலீசார் கைது செய்தனர். 5 சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×