search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

    • சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பழனிபுரம், பவானி ஆற்றின் கரையோரம் பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41), பவானி, கல்தொழிலாளர் முதல் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரும், பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்க ளிடமிருந்து 2 சேவல்கள், பணம் ரூ. 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×